1. கோடை காலத்தில் கர்ப்பிணிக ...

கோடை காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வும்

Pregnancy

Bharathi

3.2M பார்வை

3 years ago

கோடை காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வும்
வீட்டு வைத்தியம்
ஊட்டத்துள்ள உணவுகள்
தினசரி உதவிக்குறிப்புகள்
உணவுத்திட்டம்
தண்ணீர்

கோடையில் கர்ப்பமாக இருந்தால், வெப்பம் ஒரு அசௌகரியமாக உணர்வை தரும். சில கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் சூடாகவும் வியர்வையாகவும் இருப்பதாக  கூறுகின்றனர்.

Advertisement - Continue Reading Below

கர்ப்ப காலத்தில் சரியான கவனிப்பு அவசியமானது. இந்தப் பருவத்தில் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உண்டு. மற்றும் சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் கருப்பைவாய் பகுதியில் தொற்று ஏற்படலாம்.  போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி, எரிச்சல் உணர்வு தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

More Similar Blogs

    கோடை காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் சவால்கள்

    ஆரம்ப கர்ப்பத்தில் குமட்டல் மற்றும் வாந்தி

    இது 60-70 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு சாதாரண நிகழ்வு. அதிகப்படியான வாந்தியெடுத்தல் நீரிழப்பு மற்றும் உடல் பலவீனத்திற்கு வழிவகுக்கும், இது கோடை மாதங்களில் மோசமாகிவிடும்.

    அஜீரணம், வாயு, வீக்கம் மற்றும் பசியின்மை

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் உணவுக் குழாய், வயிறு மற்றும் குடல் வழியாக உணவை மெதுவாக நகர்த்துவதற்கு பங்களிக்கின்றன. குடல் தசைகள் மற்றும் ஸ்பைன்க்டர்களின் தளர்வு உள்ளது, இது அமிலம் மற்றும் உணவை மீண்டும் தூண்டுகிறது, மேலும் நெஞ்செரிச்சல் அதிகமாகின்றது.

    வளரும் கருப்பை காரணமாக மூச்சுத் திணறல்

    வளர்ந்து வரும் கருப்பை நுரையீரலை அழுத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில்  "மூச்சுத்திணறல்" உணர்வு அதிகரிக்கலாம், குறிப்பாக படுத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

    நீர் சத்து குறையாமல் இருங்கள்

    கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல் வெப்பநிலை அதிகரிப்பதை காண்கிறார்கள். அதை நிலையாக வைத்திருப்பதே குறிக்கோள். வெப்பத்தை எதிர்த்துப் போராட, ஒரு சிறந்த டிப்ஸ் தண்ணீர் சத்து ஆகும். திரவங்களை, முக்கியமாக தண்ணீர், ஆனால் பழச்சாறு அல்லது அதிக நீர் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இதை செய்ய முடியும்.

    திரவங்களை குடிப்பதைத் தவிர, ஒருவரின் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் சூப்களை சேர்த்துக் கொள்வது அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பானங்கள் உட்கொண்டால் தாகம் அடங்குவது போல் இருக்கும் ஆனால்  சிறிது நேரத்திலேயே தாகத்தின் உணர்வை ஏற்படுத்தும், எனவே முடிந்தவரை இவற்றைத் தவிர்க்கவும்.

    சரியான ஆடைகளை தேர்ந்தெடுப்பது

    உங்களுக்கு வசதியாக இருக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். கோடையில், ஆடை இறுக்கமாக இருக்கக்கூடாது மற்றும் சுவாசம் மற்றும் இயக்கத்தை எளிதாக்க வேண்டும். வியர்வையை வெளியிடும் இயற்கை துணிகளை தேர்வு செய்யவும். தோல் வழியாக சுவாசிக்க லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள். அதிகப்படியான லேயர் ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.

    லேசான மற்றும் அடிக்கடி உணவு

    கோடைக்காலத்தில் இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். மறுபுறம், அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிடுவதைத் தவிர்க்க, காலை உணவு முழுமையானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து வேளை உணவு சாப்பிடுவது நல்லது. இந்த ஐந்து உணவுகளில், குறைந்தது ஒன்று அல்லது இரண்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும். லேசான புரதங்களை உட்கொள்ள மறக்காதீர்கள்.

    ஓய்வு மற்றும் தளர்வு

    தினமும் இரண்டு முறை தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. காற்று அறைக்குள் நுழையும் வகையில் ஜன்னல்களை திறக்கவும். தண்ணீரில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதும் ஒரு நல்ல வழியாகும்.

    கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

    எல்லாருக்குமே கோடை காலத்துல ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு ஆசைப்படுவாங்க. கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்படுகிறது. ஐஸ்க்ரீமில் சர்க்கரை அதிகமாக இருக்கும், ஊட்டச்சத்துகள் இல்லை. அதனால் அடிக்கடி சாப்பிடமால் எப்போதாவது ஒருமுறை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் தவறில்லை.

    வெப்பத்தை எப்படி கையாளலாம்?

    கோடைகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு இருக்கும் அசொளகரிய உணர்வால் அதிக நேரம் ஏ.சி யில் இருக்க வேண்டும் என்று தோன்றும். முழு நேரமும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருக்க வேண்டியதில்லை. சிறிது நேரம் நடைப்பயிற்சி செல்லலாம். காலை இளம் வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து மிகவும் நல்லது. உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். வெளியே செல்ல நேர்ந்தால் கையில் தண்ணீர் எடுத்துச்செல்வது நல்லது.

    கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

    தர்பூசணி

    கோடையில் இயற்கை தந்த வரம். இது நீரிழப்புக்கு எதிரானது. கோடை நேர உணவில் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க அதிலும் கர்ப்பகால வாந்தியால் உடலில் நீரிழப்பு அதிகம் எதிர்கொள்பவர்களுக்கு இது சிறந்த பழம். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு தடுக்க தர்பூசணி பழங்கள் சிறப்பாக உதவும். இது கர்ப்பம் முழுவதும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடியது. கர்ப்பகால சோர்வு மற்றும் தலைவலி அறிகுறியை குறைக்க செய்கிறது. மேலும் கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை தக்கவைக்க செய்கிறது.

    ஆப்பிள்

    சோர்வுக்கு எதிராக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஆப்பிளும் ஒன்று. கோடைக்காலங்களில் சோர்வு இயல்பாகவே இருக்கும். இதனோடு கர்ப்பகாலமும் இணையும் போது அதிக சோர்வை எதிர்கொள்வீர்கள் இதை எதிர்கொள்ள உடலுக்கு வேண்டிய ஆற்றலை ஆப்பிள் அளிக்கும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட ஆப்பிள் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்க செய்யும். தினசரி ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறமுடியும்.

    ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு

    ஊட்டச்சத்துகள் தேவை என்னும் போது நீங்கள் உங்கள் கவனத்தை இந்த இரண்டு பழங்களின் மீது திருப்பலாம். ஆப்ரிகாட் என்னும் பாதாமி பழம் இரும்புச்சத்து நிறைவாக கொண்டிருக்ககூடியவை. இது இரத்த சோகைக்கு எதிராக போராடக்கூடியவை. கர்ப்பகாலத்தில் அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நிலையில் குழந்தைக்கு வேண்டிய இரும்புச்சத்து தாயிடம் இல்லாத போது அது அம்மாவின் உறுப்புகளிலிருந்து உறிஞ்சிகொள்கிறது. இந்த இரும்புச்சத்து ஆப்ரிகாட் பழத்தில் உள்ளது. இரும்பை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி ஆனது ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் இதையும் சேர்த்து எடுப்பது நல்லது.

    வாழைப்பழங்கள்

    கர்ப்பகாலத்தில் உடலில் ஆங்காங்கே தசைபிடிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக கால் பிடிப்புகள் இருக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என எல்லாமே உங்கள் கால்களில் பிடிப்பை உண்டாக்க கூடும். வாழைப்பழம் பொட்டாசியம் உள்ளடக்கம் கொண்டவை இது கால் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழத்தை சேருங்கள். உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இது பிரச்சனையில்லை. இல்லையெனில் மருத்துவரின் அறிவுரையோடு உணவில் சேருங்கள்.

    எலுமிச்சை

    கர்ப்பகாலத்தில் காலை நோய் என்னும் மசக்கைக்கு காரணமான அறிகுறியை விரட்ட எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீரில் பிழிந்து குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். காலை நோய் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். குமட்டல், தலைசுற்றல் உணர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் எலுமிச்சையை நுகர்வதன் மூலம் அறிகுறிகள் குறையக்கூடும். இந்த வாசனை உங்கள் வயிற்றுப் பிரட்டலை குறைக்க செய்யும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)